பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி.!
ஹட்டன் நகரில் இருந்து போடைஸ் வழியாக டயகம பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் N.C பிரிவு பகுதியில் இன்று 12ஆம் திகதி காலை 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு 75 அடி பள்ளத்தில் தேயிலை மலையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ள நிலையில் சாரதி காயமுற்று நோயாளர் காவு வண்டியில் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் சென்ற ஏனைய இரண்டு பேரும் சிறு சிறு காயங்களுக்குள்ளான நிலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.
இவ் விபத்து சம்பந்தமான விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
