உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் தடைகளை சீரமைப்பதில் தாமதம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையால் கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்களை நியமிக்கும் போது முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாதது உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து, ஊழியர்கள் திங்கட்கிழமை (09) பிற்பகல் 3.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் தேசிய ஊழியர் சங்கத்தின் தகவலின்படி, இந்த பணிப்பகிஷ்கரிப்பு 24 மணிநேரத்திற்கு முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை மின்சார சபையை புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் கீழ் மாற்றும் நடவடிக்கை ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என, அந்த மாற்று பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஹெடிகல்ல தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

27 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0