உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேகநபரான முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவது ஒரு சிக்கலான செயல்முறை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக அரசு தற்போது உயர்மட்ட இராஜதந்திர தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், எனினும் இது ஒரு எளிய நடைமுறை அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

சந்தேகநபர் நாட்டில் இல்லாத போதிலும், அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“அர்ஜுன மகேந்திரனை நாட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும். அவரை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர முயற்சிகளை நாம் கைவிடவில்லை.” – என்றும் அவர் கூறினார்.

பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று உறுதியளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தவறு செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் இறுதி நோக்கம் என்றும் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

44 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0