உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

நிழற்படக் கலைஞர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து எடுத்த காணொளி வைரல்

இந்திய செய்திகள் 10 மணி நேரம் முன்
118 பார்வைகள்

உலக நிழற்பட தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் பத்திரிகை நிழற்படக் கலைஞர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே நிழற்படம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளைக் கலைநயம் மிக்க நிழற்படங்களால் உணர்த்தும் அனைத்து நிழற்படக் கலைஞர்களுக்கும் தனது ‘உலக நிழற்பட நாள்’ நல்வாழ்த்துகள் என்றும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின், பத்திரிகை நிழற்படக் கலைஞர்களைச் சந்தித்துக் காணொளி வெளியிட்டமை தொடர்பான விபரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை : அரியவகை விலங்குகள் பறிமுதல்!

நடிகர் விக்ரம் லார்க் கிப்பான் குரங்குடன் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள…

56 0 0
இந்திய செய்திகள்

போலிப் பிரசாதத்தை விற்பனை செய்த Amazon நிறுவனத்துக்கு அபராதம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் (Amazon) நிறுவனத்துக்கு…

90 0 0
இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

70 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

62 0 0