உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஹோர்முஸ் நீரிணையில் 45 கப்பல்களுக்கு ஈரான் தடை!

உலக செய்திகள் 41 நிமிடங்கள் முன்
22 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45 எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழ்நிலையில், ஈரான் தனது கடல்சார் எல்லைக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஈரானால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபையினால்’ இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கப்பல்கள் ஈரானியப் பிராந்தியத்திற்குள் நுழையும் பட்சத்தில், அவை தடுத்து வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன், அவற்றில் உள்ள சரக்குகளும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தடை விதிக்கப்பட்ட கப்பல்களுடன் கடலில் வைத்து சரக்குகளைப் பரிமாறிக்கொள்ளும் ஏனைய பிற கப்பல்களும் உடனடியாகக் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

மற்றும் தென்கொரியா, நோர்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் கப்பல்களும் அடங்குகின்றன.

ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கு ஈரானிய கடற்படை அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், பாதுகாப்பு சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தி வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரான் உட்பட அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது – ட்ரம்ப்

ஈரான் உட்பட தனக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா தீர்க்கமான வெற்றியைப் பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தள…

52 0 0
உலக செய்திகள்

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது. அதேவேளையில், வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகளைத் தங்கள் முக்கிய…

52 0 0
உலக செய்திகள்

ஹைட்டியில் வன்முறை : குறைந்து 30 பேர் உயிரிழப்பு!!

ஹைட்டியில் தலை நகர் போர்ட்-ஓ-பிரின்ஸ்க்கு தெற்கே அமைந்துள்ள கென்ஸ்காஃப் எனும் விவசாய சமூகப் பகுதியில் வன்முறை குழு நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.…

54 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய வாய்ப்பு

அடுத்த மாதம் செப்டம்பர் 12 – 13 ஆம் திகதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், தனது பிரதிநிதிகள் குழுவுடன் பங்கேற்பார்…

65 0 0