நீண்ட நாட்களாக மாடுகளை திருடியவர்கள் சிக்கினர்.!
மன்னாரில் மிக நீண்ட நாட்களாக மாடுகளை களவாடி இறைச்சிக்காக அறுத்து விற்பனை செய்து வந்த நிலையில் நேற்று 01,01,2026 நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் பிரதான வீதியில் பெரிய கரிசல் சந்தியில் வைத்து பேசாலை முருகன் கோயிலடியை சேர்ந்தவருடைய மாட்டினை களவாடி AAF 1482 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் மாட்டின் கால்களை கயிற்றினால் கட்டி பெரிய கரிசல் பகுதியை சேர்ந்த ஸ்மைல் அஜீர் என்பவர் உள்ளடங்கலாக நால்வர் ஏற்றி வரும் போது தலைமன்னார் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை சோதனைக்குட்படுத்திய போது அவர்களிடம் சிறிதளவு ஐஸ் போதைப்பொருள் உடைமையில் இருந்தது தெரியவந்தது.
ஆகவே இக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நால்வரும் ஐஸ் போதைப்பொருளை பாவிப்பதற்காகவே மாடுகளை களவாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


