உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறையிலும் கையெழுத்து வேட்டை!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
16 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மகஜரிலும் மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.

இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனமழையால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரும் மக்கள்

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.…

17 0 0
இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!

ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான…

17 0 0
இலங்கை செய்திகள்

மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும்…

17 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,…

18 0 0