அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“சவூதி அரேபிய அரசுடன் இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு உயர்மட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அனோஜனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக இலங்கைத் தூதரகம் தீவிரமாகத் தலையிட்டுள்ளதுடன், இந்த விடயத்தைக் கையாள்வதற்காக விசேட அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.” – என்றார்.