உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

காணி கிடைக்கும் வரை எம் போராட்டம் தொடரும் : வலிகாமம் வடக்கு மக்கள் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 54 நிமிடங்கள் முன்
8 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டித்தும், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும் வலிகாமம் வடக்கு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை இழந்த மக்கள், பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் ஒன்றுகூடி இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தாம் வீடுகள் மற்றும் நிலங்கள் அற்று நீண்ட காலமாக இடம்பெயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவம் தற்போதும் தங்கியிருப்பதுடன், அங்கு விவசாயக் செயற்பாடுகளிலும் வர்த்தக நிலையங்களை அமைத்தும் தமது சொந்தத் தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.

இராணுவத்தின் பிடியில் உள்ள தமது காணிகளை மீளப்பெற்று, சொந்த நிலங்களில் மீள்குடியேறும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறையிலும் கையெழுத்து வேட்டை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி…

13 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த…

27 0 0
இலங்கை செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச்…

11 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் கையளிப்பு!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பைச்…

27 0 0