மகா ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த நால்வரின் சட@லங்களும் மீட்பு!
கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு யுவதிகளும் இளைஞர் ஒருவரும் மாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ள நிலையில், அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் நீராடிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, யுவதிகளில் ஒருவர் நீரில் மூழ்கியதாகவும், அவரைப் காப்பாற்ற முயன்றபோதே ஏனைய மூவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன மூன்று யுவதிகளையும் இளைஞரையும் தேடும் பணியில் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
இந்நிலையில் நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.