உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

மன்னார் கள்ளியாடி கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
8 பார்வைகள்

கள்ளியாடி கிராம உத்தியோகத்தர் பிரிவு (MN/06) இல் இன்று 19.09.2026 கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. T. N. சூரியராஜாவின் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கான தயார்நிலை மற்றும் எல் நினோ (El Niño) நிலைமையினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அனர்த்தத் தயார்நிலை, முன்னெச்சரிக்கை அறிவிப்பு, பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேற்றுதல், அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் சமூக மட்ட ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

கள்ளியாடி கிராம உத்தியோகத்தர், M/கள்ளியாடி G.T.M.S. பாடசாலை அதிபர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் ஏனைய தொடர்புடைய சமூக மட்டப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு சமூக மட்டத்தில் தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் உரிய நேரத்தில் துரிதமான பதிலளிப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மகா ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த நால்வரின் சட@லங்களும் மீட்பு!

கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு யுவதிகளும் இளைஞர் ஒருவரும் மாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ள நிலையில்,…

18 0 0
இலங்கை செய்திகள்

மகா ஓயாவில் நீராடச் சென்ற 3 யுவதிகள் உட்பட நால்வர் மாயம்!

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மகாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இன்று பிற்பகல் 2.00…

16 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவுத் தபால் விநியோகத்தில் தாமதம் : பல்கலைக்கழக மாணவி பாதிப்பு!

டிக்கோயா புளியாவத்தை, இன்ஜெஸ்றி பகுதியில் பதிவு தபால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.…

22 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் குறித்து அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை…

30 0 0