கிளிநொச்சியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் நெல் கொள்வனவு ஆரம்பம்!
நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலகம் மூலம் முதற்கட்டமாக 25மில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த செயற்பாட்டின் ஊடாக நெல் கொள்வனவு பணிகளினை அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று18.09.2026 மேற்கொண்டனர்
கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் ,விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நெல் கொள்வனவு இடம்பெற்றது. குரல் பதிவு அரிசி ஆலை உரிமையாளர் பொன்னம்பலம் திருஞானசம்மந்தன் மற்றும் விவசாயிகளின் குரல் பதிவு
குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக நெல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில் முன்பு எந்த அரசாங்கமும் மேற்கொள்ளப்படாத நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் களஞ்சியங்கள் பற்றாக்குறை காரணமாக நெல் கொள்வனவினை நிறுத்தியவை அடுத்து தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எந்த அரசாங்கமும் வழங்காத 25 மில்லியன் ரூபாய் நிதியினை இந்த வட்டியும் இன்றி வழங்கி விவசாயிகளிடம் நெல்லினை அரச விலைக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தமைபோன்று இனி வரும் காலங்களில் குறித்த நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தற்போதைய அரசாங்கத்திற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் தற்போதைய அரசாங்கத்தினருக்கு ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்