உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
46 பார்வைகள்

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன் தலைமை அலுவலக ஊடக மையத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்றது.

இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இரட்சணிய சேனையின் (Salvation Army) போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் மேஜர் சந்திரலதா ஜயரத்னசிங்கம் தெரிவிக்கையில், இரட்சணிய சேனையானது இங்கிலாந்தில் ஜெனரல் வில்லியம் பூத் என்பவரால் போதைப்பொருளுக்கு அடிமையான மக்களை மீட்கும் நோக்கில் தொடங்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது எனக் குறிப்பிட்டார்.

சாதி, மத, வர்க்க பாகுபாடுகளின்றி, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் நாடிச் சென்று சேவை செய்வதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாகும் என்றும், ஒரு மனிதனை ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி, சமூக ரீதியாகவும் முழுமையாகக் கட்டியெழுப்பி, ஒரு சிறந்த பிரஜையாக மாற்றுவதே இரட்சணிய சேனையின் பிரதான இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், போதைப்பொருள் பயன்பாட்டினால் நாட்டின் பல குடும்பங்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருவதாக வேதனை வெளியிட்டார்.

இதனைத் தடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா போன்ற தொலைதூரப் பகுதிகளிலுள்ள சிறிய வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மாதமொன்றிற்கு சுமார் 300 குடும்பங்கள், 350 சிறுவர்கள் மற்றும் 250 இளைஞர்களைச் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மட்டுமன்றி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அனுராதபுரம் போன்ற நாட்டின் பல பகுதிகளிலும் இச்சேவைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், புனர்வாழ்வு பெற விரும்பும் நபர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி, உரிய புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள விரும்புபவர்கள், புனர்வாழ்வு அல்லது ஆலோசனைகளைப் பெற விரும்புபவர்கள் 24 மணிநேரமும் இயங்கும் 077 6626 727 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

37 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

36 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

39 0 0
இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

38 0 0