உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் பயணிகள் நலன் கருதி ரயில் சேவைகள் இயக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
52 பார்வைகள்

வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வரும் சூழ்நிலையிலும், பொதுமக்களின் நலன் கருதி காலை நேர அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் போக்குவரத்து அதிகாரியுமான அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க வேலை நாளான இன்று, பயணிகளின் வசதிக்காக பொல்கஹாவலை, இரம்புக்கனை, மஹவ, கனீவத்த, குருநாகல், சிலாபம், ஹாலாவத்த, நீர்கொழும்பு, பெலியத்த, மாத்தறை, காலி, ஹிக்கடுவை, அலுத்கம, களுத்துறை மற்றும் பாணந்துறை ஆகிய அனைத்துப் பாதைகளிலிருந்தும் காலை நேர அலுவலக ரயில்கள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டுள்ளன.

ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே ரத்து செய்யப்பட்டதுடன், ஏனைய அனைத்து ரயில்களும் குறித்த நேரத்திற்கு இயக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மன்னார் மற்றும் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிய ரயில்களும், காங்கேசன்துறையிலிருந்து மொறட்டுவை வரை இயக்கப்பட்டு மீண்டும் கொழும்பு வந்தடையும் இரவு நேர அஞ்சல் ரயில்களும் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.

இன்று இரவு நேர அஞ்சல் ரயில்களையும் தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பகல் நேரப் பயணிகளின் வசதிக்காக பகல் நேரச் சேவைகளும் இயக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மாலை நேர அலுவலக ரயில்கள் அனைத்தையும் இயக்குவதற்குத் தேவையான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பயணிகள் எவ்வித அச்சமுமின்றி நம்பிக்கையுடன் பயணிக்க முடியும் என்றும் உறுதி அளித்தார்.

வேலைநிறுத்தத்தின் வெற்றி அல்லது தோல்வி குறித்துப் பேசுவதை விட, பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பான சேவையை வழங்குவதே திணைக்களத்தின் முதன்மை இலக்காகும் எனக் கூறிய அவர், முதற்கட்டமாக அலுவலக ரயில்களுக்கும், இரண்டாவதாக பாடசாலை ரயில்களுக்கும், மூன்றாவதாக தொலைதூர ரயில்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுப் பாதுகாப்பான முறையில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

சில ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டிருந்த போதிலும், பயணிகள் ‘Pravesha’ செயலி (App) மூலமாக எளிதாகத் தங்களுக்கான பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இயக்கப்படும் ரயில்களின் நேர அட்டவணைகள் மற்றும் உடனுக்குடனான தகவல்கள் ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நண்பகல் வேளை நிலவரப்படி 85-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினமும் ரயில் சேவைகளை மேலும் அதிகரித்து இயல்பு நிலையைத் தக்கவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

37 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

36 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

39 0 0
இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

38 0 0