“தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” செப்டம்பர் 25 இல் அங்குரார்ப்பணம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி மதுரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக குறித்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 25ஆம் திகதி மதுரையில் நடைபெறவுள்ள நிகழ்வில் முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய மரபை அடிப்படையாகக் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமனின் அன்பளிப்பாக 1பவுண் தங்க மோதிரத்தை வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், 2026 ஜூன் 22ஆம் திகதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் இந்திய பெறுமதியில் சுமார் ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதுடன், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளையும் அவர்களின் தாய்மார்களையும் கௌரவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.