உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்துமாறு மீனவ அமைப்புகள் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
99 பார்வைகள்

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்கரையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரியவருகையில்,

நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விரும் நிலையில் ஏனைய சிறு தொழில் மீனவர்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் மீனம்பா படகுகளை கடற் படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக சட்டவிரோத தொழில இடம் பெறுவதாக அப்போது சிறு தொழில் மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடற்கரையினர் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும்.

சட்ட விரோத மீன்பிடிக்க ஈடுபடும் மீனவர்கள் சிலருக்கு அதிகாரிகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்குவதாக நம் தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நாங்கள் அரசியல்வாதிகளிடம் ஒன்றை கேட்க விரும்புகிறோம் அரசியலுக்காக எதையும் செய்யாதீர்கள் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபடுபவர்களை நிறுத்துமாறு கூறுங்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனமழையால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரும் மக்கள்

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.…

26 0 0
இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!

ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான…

26 0 0
இலங்கை செய்திகள்

மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும்…

27 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,…

30 0 0