வட மாகாண கால்நடை வைத்தியர்கள் சுகயீன விடுப்பு போராட்டம்.!
வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் நிர்வாகம் மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி சுகயீன விடுப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
அதாவது, வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் நிர்வாகம் மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் இன்று முதல் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான சேவைகளை பெறமுடியாது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.