உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

எமது கூட்டங்களுக்கு வருபவர்கள் மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை.!

இலங்கை செய்திகள் 57 நிமிடங்கள் முன்
41 பார்வைகள்

“எமது கூட்டங்களுக்கு வருகை தருபவர்களை மதுபானம் அருந்தாமல் வருமாறு கட்டளையிடும் அதிகாரம் எங்களிடம் கிடையாது. மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும். நாங்கள் யாருக்கும் மது அருந்திவிட்டு வருமாறு குறிப்பிடவும் இல்லை, கட்சிக் கூட்டத்துக்காக மதுபானம் வாங்கிக் கொடுக்கவும் இல்லை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,
“அனுராதபுரத்தில் இடம்பெற்ற எமது கட்சியின் மக்கள் பேரணியில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏழை விவசாயிகளும், உழைக்கும் தொழிலாளர்களும் திரளாகக் கலந்துகொண்டார்கள். ஆனால், அக்கூட்டத்துக்கு வந்த மக்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே திரிபுப்படுத்தப்பட்ட காணொளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பெருந்தொகையான மதுபானம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றை இந்த நாட்டு மக்கள்தான் குடிக்கின்றார்கள். மதுபானம் அருந்துவதும், அதனைத் தவிர்ப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பமும் உரிமையுமாகும். எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வரவேண்டும் என்று நாங்கள் எவருக்கும் நிபந்தனை விதிக்கவில்லை. அதேபோல், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எமது தரப்பிலிருந்து எந்தவிதமான மதுபானமும் வாங்கிக் கொடுக்கப்படவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.!

மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் சித்தாண்டியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

வரலாறு படைத்த ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்.!

உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் (World Athletics Ultimate Championship) மற்றும் டைமண்ட் லீக் (Diamond League) ஆகிய இரண்டு பட்டங்களையும் வென்ற இலங்கையின் ஈட்டி எறிதல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தியாக தீபம் திலீபனின் 39ம் ஆண்டு நினைவு தினத்தின் முதலாவது நாள் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

38 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண கால்நடை வைத்தியர்கள் சுகயீன விடுப்பு போராட்டம்.!

வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் நிர்வாகம் மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி சுகயீன விடுப்பு…

35 0 0