யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!
புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் சிவன் கோவில் அருகே புத்தூர் மேற்கில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 02:30 மணியளவில் அந்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டதை அடுத்து, அயல் வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டார்.
இதன்போது குறித்த பெண் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விடயம் தெரியவந்தது. இந்நிலையில் இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.