சவுதி வான் படைத் தளத்தின் மீது ஹவூதி போராளிகள் தாக்குதல்!
தென் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள கிரேட்டர் ஹனீஷ் மற்றும் லெஸர் ஹனீஷ் (Greater and Lesser hanish) ஆகிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக ஏமனின் ஹூதி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சவுதி அரேபியாவின் போர் வானூர்திகள், 54 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சவுதி அரேபியாவின் கமிஸ் முஷைத் (Khamis Mushait) பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிங் காலித் (King Khalid) வhன் படைத் தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தி தங்களது படைகள் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாகவும் ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இலக்குகள் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இது குறித்து சவுதி அரேபிய அரசhங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதில்களும் வெளியாகவில்லை.
முன்னதாக, வியூக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மொக்காவை (Mocha) சில நாட்களுக்கு முன்பு ஹூதிகள் கைப்பற்றினர்.
இந்தநிலையில்இ அந்த நகரைக் கைப்பற்றி மீட்கும் நோக்கில் சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகள் ஹூதிகளின் முகாம்கள் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் பல முனைகளிலும் தரைவழிப் போர் தீவிரமடைந்துள்ளது.