உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!

இந்திய செய்திகள் 6 மணி நேரம் முன்
101 பார்வைகள்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்தித்து முக்கிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கிண்ண (Michelin Le Mans Cup) சிற்றூந்து பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுகிறார்.

இந்தப் போட்டியை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக லெ மான்ஸ் கிண்ண நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிரத்யேகமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ மற்றும் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுவதற்காகவும் முதலமைச்சர் விஜய் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்யின் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில்,…

104 0 0
இந்திய செய்திகள்

பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன்…

162 0 0
இந்திய செய்திகள்

“இன்றைக்கும் தழும்புகள் இருக்கு…” : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைவாசத்தின்போது…

96 0 0
இந்திய செய்திகள்

குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டு…

156 0 0