உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

“இன்றைக்கும் தழும்புகள் இருக்கு…” : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!

இந்திய செய்திகள் 6 மணி நேரம் முன்
89 பார்வைகள்

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறைவாசத்தின்போது தாக்கப்பட்டதில் தனது தாடை என்பு உடைந்ததாகவும், அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தழும்புகள் இன்றளவும் தனது உடலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் சைகை செய்ததாக சர்ச்சை எழுந்திருந்தது.

இந்தச் சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், தனது சிறைவாச காலத்தில் எதிர்கொண்ட கொடுமைகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட உடல் தழும்புகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டு…

144 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசினார். முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி…

101 0 0
இந்திய செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை!

இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்றப் பதிலுரையின் போது பேசிய…

137 0 0
இந்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் தயிர்ப்பானை உடைக்கும் போட்டியில் விபரீதம் – சிறுவன் உட்பட இருவர் பலி!

மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இருந்த ஏழு வயது சிறுவன்…

156 0 0