உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடியில் சிக்கிய 6 ஆசிரியர்கள் பணிநீக்கம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
133 பார்வைகள்

அஸ்வெசும மோசடி தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியல் ஹட்டன் நீதி மன்றம் நீடிப்பு.

நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திடம் இன்று (08) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான இன்றைய வழக்கு விசாரணையின்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் இணையவழி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதுவரையிலான விசாரணைகளில் 2 கோடியே 85 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த தொகையும் இந்த மோசடியோடு தொடர்புப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் விசாரணைகளை சி.ஐ.டியிடம் ஒப்படைக்குமாறு ஹட்டன் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி அந்தோணிசாமி பீட்டர் போல் உத்தரவிட்டார்.

இதேவேளை, நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் உடனடி அமலுக்கு வரும்வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த திங்கட்கிழமை (07) முதல் பாடசாலைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், 07ஆம் திகதி முதல் சம்மந்தப்பட்ட 06 ஆசிரியர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஹட்டன் கல்வி பணிமனையின் ஊடாக அந்தந்த ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொகவந்தலாவை, சாமிமலை ஆகிய பிரதேச பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. விசாரணைகளின் ஆரம்பத்திலேயே ஹட்டன் கல்வி வலய ஆசிரியர்கள் 06 பேர் இந்த மோசடியோடு தொடர்பிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து 06 ஆசிரியர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாவட்டச் செயலாளர் ஊடாக கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. கல்வி அமைச்சின் செயலாளர் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவர்களுக்கு எதிரான விசாரணைகளின் முதற்கட்டமாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சம்மந்தப்பட்ட 06 ஆசிரியர்களும் மோசடியான முறையில் பெருந்தொகையான அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முனையூர் பாடசாலை அபார சாதனை!

கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சிறப்பான பெறுபேற்றை…

74 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – சத்தியலிங்கம் எம்பி வலியுறுத்தல்!

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.…

125 0 0
இலங்கை செய்திகள்

அந்தணர்களின் தலைமைத்துவமே இந்து மத பீடத்திற்கு சிறப்பானது – சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவிப்பு

அண்மைக்காலமாக இலங்கையில் இந்து மதத்திற்கு தலைமைத்துவம் இல்லை என்பது பேசு பொருளாக அமைந்திருந்தது. அந்த வகையில் ஒரு சில அமைப்புகள் தாங்களாகவே முன்வந்து பீடங்களை அமைக்கலாம் என்ற…

112 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் வீதிகளில் அணிவகுத்த மாணவர்கள்! : விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகங்களும் அரங்கேற்றம்!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும்…

118 0 0