உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முனையூர் பாடசாலை அபார சாதனை!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
75 பார்வைகள்

கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

குறித்த பாடசாலையில் இருந்து இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 7 மாணவர்களில் 3 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

பின்தங்கிய கிராமப் பகுதியைச் சேர்ந்த பாடசாலையாகக் காணப்படும் முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கிடைத்துள்ள இந்தச் சிறப்பான பெறுபேறு, மாணவர்களின் விடாமுயற்சி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் சிறந்த வழிகாட்டலுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு விசேட கௌரவிப்பு

மாணவர்களின் இந்தச் சிறந்த பெறுபேற்றின் பின்னணியில், தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களை ஆரம்பம் முதல் அர்ப்பணிப்புடன் வழிநடத்திய அனைத்து ஆசிரியர்களினதும் பங்களிப்பையும், அதிபரின் வழிகாட்டலையும் பாராட்டும் வகையில் விசேட கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது தரம் 5 மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி விக்னேஸ்வரன் புஸ்பராணி அவர்களுக்கு விசேட கௌரவம் வழங்கப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

கல்வி அதிகாரிகள் வாழ்த்து

இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி), பிரதிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி மற்றும் கல்வி முகாமைத்துவம்), உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்), ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் PSI இணைப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த பெறுபேற்றைப் பாராட்டிய கல்வி அதிகாரிகள், எதிர்காலத்திலும் கல்வித் துறையில் மேலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தோற்றிய 7 மாணவர்களில் 3 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளமை, முனையூர் பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.

வளங்கள் குறைவாகக் காணப்படும் பின்தங்கிய கிராமப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை என்ற நிலையிலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்ட தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் பலனாக இவ்வாறான சிறப்பான பெறுபேறு கிடைத்துள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடியில் சிக்கிய 6 ஆசிரியர்கள் பணிநீக்கம்!

அஸ்வெசும மோசடி தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியல் ஹட்டன் நீதி மன்றம் நீடிப்பு. நோர்வூட் பிரதேச செயலக…

133 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – சத்தியலிங்கம் எம்பி வலியுறுத்தல்!

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.…

125 0 0
இலங்கை செய்திகள்

அந்தணர்களின் தலைமைத்துவமே இந்து மத பீடத்திற்கு சிறப்பானது – சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவிப்பு

அண்மைக்காலமாக இலங்கையில் இந்து மதத்திற்கு தலைமைத்துவம் இல்லை என்பது பேசு பொருளாக அமைந்திருந்தது. அந்த வகையில் ஒரு சில அமைப்புகள் தாங்களாகவே முன்வந்து பீடங்களை அமைக்கலாம் என்ற…

112 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் வீதிகளில் அணிவகுத்த மாணவர்கள்! : விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகங்களும் அரங்கேற்றம்!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும்…

118 0 0