உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
126 பார்வைகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 37 வயதுடைய, மஹியங்கனை மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வைத்தியசாலையின் பிரேத அறை ஊழியராவார்.

மருதானைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரேத அறைக்கு அருகாமையில் வைத்து இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை – வானத்தமுல்ல பகுதியிலிருந்து போதைப்பொருட்களைப் பெற்று, வைத்தியசாலை ஊழியர்களுக்கும் வெளிநபர்களுக்கும் நீண்டகாலமாக விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சட்ட மருத்துவப் பரிசோதனையின் போது இவ்விருவரும் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சம்பத் இந்திக குமாரவிடம் வினவியபோது, கைது செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் இருவரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச்…

77 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது. கடந்த 2008…

94 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல்.!

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2026 செப்டம்பர் 08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை, கடற்படை…

89 0 0
இலங்கை செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் கொள்கை பலவீனம்.!

தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் கொள்கை பலவீனமாக காணப்படுகின்றன. இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளும் செயல்திறனற்ற விதத்தில் அமைந்து காணப்படுகின்றன. இதற்கு முன்னரும்…

99 0 0