உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!

இலங்கை செய்திகள் 56 நிமிடங்கள் முன்
85 பார்வைகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்தில் இறைச்சிக் கடையில் பணிபுரியும் 23 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, தாம் அறிவிப்பதற்கு எதுவுமில்லை என்பதைக் குறிக்கும் ‘பசுமைப் பாதை’ (Green Channel) வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் சோதனையிடப்பட்டனர்.

அவர்களது பயணப் பைகளைச் பரிசோதித்தபோது, விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் ‘குஷ்’ ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், திராட்சைப் பசை போன்று தோற்றமளிக்கும் வகையில் பொலித்தீன்களில் சுற்றப்பட்டிருந்த 641 கிராம் ‘ஹஷீஷ்’ ரக போதைப்பொருளையும் அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினராக நலிந்த பிரதீப் பதவியேற்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராகத் திரு. நலிந்த பிரதீப் அவர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக…

1 0 0
இலங்கை செய்திகள்

ஆசிரியர் சேவைக்கு தகுதி பெறுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான கலந்துரையாடல்.!

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான…

101 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது. கடந்த 2008…

102 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல்.!

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2026 செப்டம்பர் 08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை, கடற்படை…

95 0 0