உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் இரு பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
142 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அக்கரைப்பற்று RKM மகாவித்தியாலயத்தின் புதிய நிரந்தர அதிபராக திரு. தங்கராசா இராசநாதனும், கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் புதிய நிரந்தர அதிபராக திரு. பேரின்பராஜா திலகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார் அவர்களினால் உரிய அதிபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வலயக் கல்விப் பணிப்பாளரின் முன்னிலையில் குறித்த இரு அதிபர்களும் தத்தமது பாடசாலைகளின் பதிவேட்டில் கையொப்பமிட்டு, தங்களது புதிய பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய அதிபர்களுக்கு கல்விச் சமூகத்தினர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி கௌரவிப்பு

கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலய மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி ரவிகரன் விஸ்வாதியா பாராட்டி…

129 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமைக்கு எதிராக FR மனுத் தாக்கல்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள்…

114 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்குமாறு நாமல் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம்…

137 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்…

77 0 0