உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி கௌரவிப்பு

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
136 பார்வைகள்

கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலய மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி ரவிகரன் விஸ்வாதியா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்தின் திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையைச் சேர்ந்த ரவிகரன் விஸ்வாதியா என்ற மாணவி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 173 புள்ளிகளைப் பெற்று திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவியாக தெரிவாகியுள்ளார்.

இம்மாணவியைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், பரிசு வழங்கும் நிகழ்வு திருக்கோவில் கல்வி வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பப்பிரிவு ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார், ஆரம்பப்பிரிவு மற்றும் கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர், ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்டத்தில் சிறப்பான பெறுபேற்றைப் பெற்ற மாணவி ரவிகரன் விஸ்வாதியாவுக்கு பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டதுடன், பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் கல்வி கற்பித்த ஆசிரியர்களையும் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் கௌரவித்தார்.

மாணவியின் இந்தச் சாதனை பாடசாலை மட்டத்திலும், ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திலும், திருக்கோவில் கல்வி வலயத்திலும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளதாக நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31…

1 0 0
இலங்கை செய்திகள்

யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடல்!

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2-வது மண்டலங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் அதிக வெப்பநிலையால் விலங்குகள் மற்றும்…

60 0 0
இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீளாய்வுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 7 முதல் 21 வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள்…

83 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமைக்கு எதிராக FR மனுத் தாக்கல்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள்…

114 0 0