உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்குமாறு நாமல் கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
138 பார்வைகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கடிதம், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாகச் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் அலுவலகப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையிலுள்ள மரபுகளுக்கு அமைவாக இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வழக்கமான மரபுகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி கௌரவிப்பு

கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலய மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி ரவிகரன் விஸ்வாதியா பாராட்டி…

129 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமைக்கு எதிராக FR மனுத் தாக்கல்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள்…

114 0 0
இலங்கை செய்திகள்

ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் இரு பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய,…

142 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்…

77 0 0