உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
55 பார்வைகள்

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி தம்புளுவன, மாரலிய பகுதியைச் சேர்ந்த, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடித்த 32 வயதுடைய பிரசாத் சம்பத் விஜேரத்ன என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இவர் இரத்தினபுரி நகரில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்தவர் ஆவார்.

நேற்று அந்தப் பகுதியில் நண்பர்கள் சிலர் மாணிக்கக் கற்கள் தோண்டிக் கொண்டிருந்த வேளையில், அங்கு நீராடச் சென்ற மேற்படி இளைஞன் ஆழமான குழியில் சிக்கி நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

இளைஞர் திடீரென காணாமல்போனதைத் தொடர்ந்து, மாணிக்கக் கல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் பிரதேச மக்களும் இணைந்து நேற்று இரவு 8 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து எலபாத்த பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சோகமயமான சூழல் நிலவுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வாதிகாரப் பாதையில் பயணித்து ஜனநாயகத்தை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்கின்றது அரசு.!

திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல்…

2 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரத்தில் மைதானம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது.!

அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு…

81 0 0
இலங்கை செய்திகள்

வாகனம் மோதி பெண் குழந்தை உ*யிரிழப்பு.!

கிளிநொச்சி, உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கியபோது, வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற பெண் குழந்தை…

51 0 0
இலங்கை செய்திகள்

நாமலின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும்.!

“நாமல் ராஜபக்ஷவின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும் அல்லது இல்லாமலும் போகலாம்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச, ஊழல் விசாரணை…

29 0 0