உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

பீஜிங்கில் சர்வதேச ஊடக மாநாடு; 90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

உலக செய்திகள் 18 மணி நேரம் முன்
51 பார்வைகள்

சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்டம் சீனாவின் பீஜிங் நகரில் நேற்று (4) ஆரம்பமானது.

இம்முறை நிகழ்ச்சித்திட்டத்தில் உலகளாவிய ரீதியில் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அவர்களில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 20 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சுமார் 3 மாதங்கள் வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இதன்போது பயிற்சி பட்டறைகள், சிறப்பு விவாதங்கள், நேர்காணல்கள் மற்றும் சீன கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இணைவதற்கும் அவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தெற்கு உலகளாவிய நாடுகளின் ஊடக நிறுவனங்களுக்கு இடையே நடைமுறை ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான தளத்தை அமைத்துக்கொடுத்தல் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு சீனா பற்றிய பரந்த மற்றும் ஆழமான புரிதலை வழங்குதல் என்பன இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2014ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் இதுவரை உலகின் 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

13 வயதில் செய்த சாதனை – பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000 பீட்சாக்களை வழங்கிய சிறுமி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 13 வயதான இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் தனது சகோதரருடன் இணைந்து உருவாக்கிய செயலியின் மூலம், பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000-க்கும் மேற்பட்ட…

96 0 0
உலக செய்திகள்

கார்க் தீவு அருகே ஈரான் எண்ணெய் கப்பலை குறிவைத்த அமெரிக்கா!

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில்…

75 0 0
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவின் புதிய உலக வரைபடம் 

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

46 0 0
உலக செய்திகள்

நைஜீரியாவில் நச்சு வாயு கசிவு – 37 பேர் பலி

நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற நச்சு வாயு கசிவு சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஒக்ரிகா பகுதியில் உள்ள ஒகாரி ஜெட்டி அருகே,…

49 0 0