உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

வாகனம் மோதி பெண் குழந்தை உ*யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
52 பார்வைகள்

கிளிநொச்சி, உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கியபோது, வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற பெண் குழந்தை சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தின் சாரதியான குழந்தையின் தாத்தா அதனை இயக்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை அதன் சக்கரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றப் பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று இளைஞன்.!

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பை பகுதியைச் சேர்ந்த சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…

65 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்குள் நாமலின் உயிருக்கு பேராபத்து; சி.ஐ.டியில் மொட்டு முறைப்பாடு.!

சிறைச்சாலைக்குள்ளேயே கலவரமொன்றை உருவாக்கி அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உயிரைப் போக்குவதற்குச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…

67 0 0
இலங்கை செய்திகள்

சர்வாதிகாரப் பாதையில் பயணித்து ஜனநாயகத்தை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்கின்றது அரசு.!

திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல்…

14 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரத்தில் மைதானம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது.!

அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு…

86 0 0