நாமல் ராஜபக்சவின் கைதுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைதுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்த SLPPயின் பிரமாண்டக் கூட்டத்தை முடக்கும் நோக்கிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, செப்டம்பர் 4 வெளியிட்டுள்ள அறிக்கையில் UNP தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைப் போலவே, நாமல் ராஜபக்சவிற்கும் நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு ஜனநாயக உரிமை உண்டு என்றும், அதனைத் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அரசின் மக்கள் ஆதரவு சரிந்து வருவதையே இந்நடவடிக்கை காட்டுவதாகவும், “கைதுகள் மூலம் அரசியல் தலைவர்களுக்கான மக்கள் ஆதரவை அழித்துவிட முடியாது” என்றும் UNP தெரிவிடைத்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.