உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு

உலக செய்திகள் 43 நிமிடங்கள் முன்
18 பார்வைகள்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருக்குலைந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.

இதன்போது, போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளுக்கு அருகிலுள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் சேதமடைந்ததில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை மீட்கும் பணியில் நேபாள இராணுவத்தினர் கடந்த 9 நாட்களாக ஈடுபட்டு வந்ததுடன், இந்திய சுரங்க மீட்பு நிபுணர்களும் உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் ஆகிய இருவரை இன்று காலை நேபாள இராணுவத்தினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இருவரும் இராணுவ வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சுவாசிக்கத் தேவையான ஒக்சிஜன் குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.

9 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரான் போரில் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை

ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…

34 0 0
உலக செய்திகள்

காசா மக்களை வெளியேற்றும் திட்டம்

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் முன்வைத்துள்ளார். முதல் ஆண்டில் 2.5 லட்சம் பேரும், அடுத்த…

42 0 0
உலக செய்திகள்

 EOS-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவல்

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்த GSLV-F17 ராக்கெட் இன்று (04) அதிகாலை 2.55 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில்…

59 0 0
உலக செய்திகள்

செயற்கை நுண்ணறிவுக்குத் தடை

அமெரிக்காவின் மிகப்பெரிய பாடசாலைகள் அமைந்துள்ள நியூயோர்க் நகரில் பொதுப் பாடசாலைகளில் பயிலும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுவாக 13 அல்லது 14 வயதுடையவர்கள் ஏஐ என்ற…

34 0 0