உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

ஈரான் போரில் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
45 பார்வைகள்

ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடம் தங்கு தடையின்றி பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அதிநவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பெருமளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் போருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியுள்ள அவர் ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானுடனான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்தின் பலம் மற்றும் ஆயுத வலிமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்பின் இந்த பதில் அமைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கடுமையாக வீழ்ச்சியடைந்த கப்பல் போக்குவரத்து!

சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய நரம்பாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை வழியில் கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. Kpler நிறுவனம் வெளியிட்ட ஆரம்பக்கட்ட…

15 0 0
உலக செய்திகள்

9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருக்குலைந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட…

23 0 0
உலக செய்திகள்

காசா மக்களை வெளியேற்றும் திட்டம்

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் முன்வைத்துள்ளார். முதல் ஆண்டில் 2.5 லட்சம் பேரும், அடுத்த…

42 0 0
உலக செய்திகள்

 EOS-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவல்

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்த GSLV-F17 ராக்கெட் இன்று (04) அதிகாலை 2.55 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில்…

59 0 0