இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; இருவர் வைத்தியசாலையில் அனுமதி.!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இன்று வௌ்ளிக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.