ரயிலில் மோதி ஒருவர் உ*யிரிழப்பு.!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா ரயில் நிலையத்திற்கும் திருகோணமலை ரயில் நிலையத்திற்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவராவர்.
இது விபத்தா? அல்லது உயிர்மாய்ப்பா? என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.