செட்டிகுளம் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சத்தியலிங்கம் எம்.பி. பல்வேறு கோரிக்கைகள்
செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (03.09.2026) அபிவிருத்திக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம், செட்டிகுளம் பிரதேச மக்களின் காணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தார்.
வீரமாணிக்கங்குளம், முசல்குத்தி பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்து மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரினார். இதற்கு ஒரு மாதத்திற்குள் 250 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என அபிவிருத்திக்குழுத் தலைவர் உறுதியளித்தார்.
கப்பாச்சியில் சுமார் 1,700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் சத்தியலிங்கம் எம்.பி. கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இவ்விடயம் நாளை நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பேசப்படும் என தெரிவித்தார்.
மேலும், செட்டிகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அபிவிருத்தி செய்தல், முக்கிய சந்தியில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைத்தல், மக்களின் காணிகளில் எல்லைக்கற்கள் இடுவதை நிறுத்துதல், நேரியகுளத்தில் தபால் நிலையம் அமைத்தல் மற்றும் செட்டிகுளத்தில் மின்சார சபை நுகர்வோர் சேவை மையம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.