உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா. தலைவர் ஆழ்ந்த இரங்கல்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
36 பார்வைகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்துக்கு நேற்று நேரில் சென்று, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேபாள மக்களுடன் தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேபாளம் எதிர்கொண்டுள்ள இந்தக் கடினமான சூழ்நிலையை விரைவில் கடந்து, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டுமொருமுறை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, மேல்மாகாண உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் தொழிற்சங்க உப தலைவர் ராஜமணி ஆகியோர் உடனிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குருதிக் கொடை நிகழ்வு.!

ஹட்டன் தலைமையகக் காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்த குருதிக் கொடை நிகழ்வு இன்று (3) ஹட்டன் காவல் நிலையத்தில்…

45 0 0
இலங்கை செய்திகள்

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடக சந்திப்பு.!

வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி, வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.…

19 0 0
இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளர் ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான அமரர் அடலேறு ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக்…

55 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் “குடுநோனா” கைது.!

பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த “நோனா அம்மா” என்றழைக்கப்படும் பத்மா ரஞ்சனி என்ற பெண், கிரிபத்கொட பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிகுளத்தைச் சேர்ந்த…

64 0 0