உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடக சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
22 பார்வைகள்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி, வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா, நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கடல் அட்டைத் தொழில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில் முறைகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாமனாரை கொ*லை செய்த மருமகன் கைது.!

கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலுகடுமெட்டியாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகே நேற்று புதன்கிழமை (02)…

70 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அத்தியாவசியம்.!

கொழும்பில் நடைபெற்ற “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களித்தல் பற்றிய பிராந்திய மாநாடு 2026 (Overseas Voting – OCV)” சர்வதேச மாநாட்டின் விருந்தினர் வரவேற்பு…

45 0 0
இலங்கை செய்திகள்

குருதிக் கொடை நிகழ்வு.!

ஹட்டன் தலைமையகக் காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்த குருதிக் கொடை நிகழ்வு இன்று (3) ஹட்டன் காவல் நிலையத்தில்…

50 0 0
இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளர் ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான அமரர் அடலேறு ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக்…

57 0 0