தவிர்க்க முடியாத கட்டத்தில் அமெரிக்கா-ஈரான் போர்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் இல்லாத, அதேசமயம் முழு அளவிலான போரும் இல்லாத ஒரு பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், இது எந்த நேரத்திலும் பேரழிவை ஏற்படுத்தும் நேரடிப் போராக மாறக்கூடும் என சர்வதேச அரசியல் பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் ராணுவ வளங்கள் கணிசமாகக் குறைந்து வருவதுடன் வாஷிங்டனில் அரசியல் அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் ஈரானின் பொருளாதாரம் சரிவடைந்து, அதன் நாணயத்தின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
“தற்போது நிலவும் இந்தச் சுழற்சியை உடைக்க ஏதேனும் ஒரு நாடு போரை தீவிரப்படுத்த விரும்பலாம்” என Crisis Group இன் மூத்த ஈரான் பகுப்பாய்வாளர் ஹமித்ரேசா அசிசி தெரிவித்துள்ளார்.
இதுவரை இரு நாடுகளும் தவிர்க்க நினைத்த அந்த ‘முழு அளவிலான போர்’எனும் ஆபத்தான புள்ளிக்கு இந்த நிலைமை இரு தரப்பையும் கொண்டு செல்லக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.