சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி14 வயது சிறுவன் உயிரிழப்பு!
பொலன்னறுவை, சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேகம பகுதியைச் சேர்ந்த சிறுவன், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலிக்கு அருகில் சென்றபோது மின்சாரம் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கிய நிலையில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்த நபர், தனது வீட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் அதற்கு மின்சாரம் வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சட்டவிரோத மின்சார வேலியை அமைத்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரிபுர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.