உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
61 பார்வைகள்

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த கபரகல 50 குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீடமைப்பு திட்டத்தின் 50 வீடுகள், ஆகஸ்ட் 28 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இதற்கமைய,புதிய வீடுகளில் குடியேறும் 50 குடும்பங்களுக்கும் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான வீட்டு உபகரணங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்வு, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் இன்று (25) நடைபெற்றது.

இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கும் தலா 10 பரப்பு காணி மற்றும் 550 சதுர அடி கொண்ட முழுமையான 50 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டை அமைப்பதற்கு சுமார் 32 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

வீடு மற்றும் காணி வழங்குவதோடு மட்டுமல்லாமல், புதிய வீட்டில் அன்றாட வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 175,000 ரூபாய் பெறுமதியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படுவது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

அந்த வகையில், பல வருடங்களாக பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டியிருந்த 50 குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு, சொந்த காணி, கௌரவமாக வாழும் வாய்ப்பு மற்றும் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான அடிப்படை வசதிகளும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கின்றன.

இந்த நிகழ்வில் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்னன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் மற்றும் ரவீந்திர பண்டார ஆகியோர், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம ஆகியோர், அனுசரணையாளர்கள் உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

47 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

72 0 0