உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

மானிப்பாய் சபைக்கு நெருப்புச் சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
56 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு சட்டியுடன் திடீரென நுழைந்ததால் அங்கு ஆரவாரம் ஏற்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.பகீரதன்,
கல்லூண்டாய் குப்பை மேடானது அடிக்கடி எரிகிறது. இதனால் அங்கு இருக்கின்ற மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர்.

நேற்றும் கூட அந்த குப்பை மேடானது எரிகிறது. யாழ். மாநகர சபையானது பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

இந்த பிரச்சினையானது எமது பிரதேச சபையிலும், பல திணைக்களங்களிலும் பேசப்பட்டிருப்பதுடன் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்கொணரபட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை.

கல்லூண்டாயில் பொலுத்தீன், பம்பஸ் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதன் மூலம் மக்கள் சுவாசம் சம்பந்தமான நோய்களை எதிர்கொள்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் முகமாக நான் இன்று பொலுத்தீன் உள்ளிட்ட பொருட்களை எரித்துக்கொண்டு சபைக்குள் வந்தேன். எமது மக்கள் தினம் தினம் படுகின்ற துயரத்தை அடையாள ரீதியாக வெளிப்படுத்துகிறேன்.

குப்பைமேடு தொடர்பாக மானிப்பாய் தவிசாளர் க.ஜெசீதனின் செயற்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மாநகர சபையின் கண்மூடித்தனமான செயற்பாட்டுக்கு தவிசாளர் துணை போகின்றார். ஏனெனில் இது சம்பந்தமாக நான் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைத்தும் அது சம்பந்தமான எந்தவிதமான நகர்களையும் தவிசாளர் முன்னெடுக்கவில்லை.

யாழ். மாநகர சபையிலும் மானிப்பாய் பிரதேச சபையிலும் ஆளுங்கட்சி இலங்கை தமிழரசு கட்சி என்பதால் தவிசாளர் க.ஜெசீதன் இந்த விடயத்தில் மாநகர சபைக்கு துணை போகின்றார் போல் தெரிகிறது. அவ்வாறு இல்லாமல் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். எமது மக்கள் பாதிக்கப்படுகின்ற வேளை காட்சிக்காகவோ மேலிடத்திற்காகவோ அவர் துணை போகின்றது என்பது ஒரு கேவலமான விடயம் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அன்னாசிப் பழங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய ஆயத்தம்

இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

56 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி விடுவிப்புப் போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி வடக்கில்…

64 0 0