உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பச்சிலைப்பள்ளி சமுர்த்தி வங்கியின் களஞ்சிய அறை திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
127 பார்வைகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சமுர்த்தி வங்கியின் களஞ்சிய அறை திறப்பும் சமுர்த்தி உதவித்திட்டங்கள் வழங்கல் நிகழ்வும் இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கினைப்புக் குழுத் தலைவருமான கருணைநாதன் இளங்குமரன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீலங்கா பச்சிலைப்பள்ளி பிரதேச இணைப்பாளர் தேவநாயகம் சுஜீபன், பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் கேதீஸ்வரநாதன் ஜெனகசிவசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1.6 மில்லியன் ரூபாய் செலவில் வங்கிக்கான களஞ்சிய அறை அமைக்கப்பட்டது. 27 பேருக்கு 150,000 பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் “சிப்தொற” புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கு 2026-2028 கல்வியாண்டில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் “சவிபல” கடன் திட்ட பயனாளிகள் இருவருக்கு காசோலையும் வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0