பச்சிலைப்பள்ளி சமுர்த்தி வங்கியின் களஞ்சிய அறை திறந்து வைப்பு.!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சமுர்த்தி வங்கியின் களஞ்சிய அறை திறப்பும் சமுர்த்தி உதவித்திட்டங்கள் வழங்கல் நிகழ்வும் இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கினைப்புக் குழுத் தலைவருமான கருணைநாதன் இளங்குமரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீலங்கா பச்சிலைப்பள்ளி பிரதேச இணைப்பாளர் தேவநாயகம் சுஜீபன், பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் கேதீஸ்வரநாதன் ஜெனகசிவசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1.6 மில்லியன் ரூபாய் செலவில் வங்கிக்கான களஞ்சிய அறை அமைக்கப்பட்டது. 27 பேருக்கு 150,000 பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் “சிப்தொற” புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கு 2026-2028 கல்வியாண்டில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
மேலும் “சவிபல” கடன் திட்ட பயனாளிகள் இருவருக்கு காசோலையும் வழங்கப்பட்டது.

