உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னாரில் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
112 பார்வைகள்

முழு நாட்டையும் அழகுபடுத்தும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (8) ஆரம்பமாகியுள்ளது.

ஒன்றாக இணைவோம் – சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (8) காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை சூழலை முழுமையாக சுத்தப்படுத்துகின்ற குறித்த வேலைத்திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வைத்தியசாலை பணியாளர்கள், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட பணியாளர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படையினர் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாங்கள் வாழ்கின்ற பிரதேசத்தை நாங்கள் தூய்மையாக வைத்திருக்கின்றோம் என்ற அடிப்படையிலும், கூட்டுணர்வு செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0