கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
இதன்போது அத்தியடி – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த துரைராசா புஸ்பநாதன் (வயது 51) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்சியம் நீக்கியை குடித்துள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா மேற்கொண்டார். யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.