உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
116 பார்வைகள்

இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சந்திப்பைத் தொடர்ந்து, 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதி தொடர்பான ஒப்பந்தங்கள் இரு தரப்பினராலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இக்கடன் வசதியானது, டித்வா புயலுக்குப் பின்னர் இந்தியா இலங்கைக்கு அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள்கட்டமைப்பு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதியின் ஊடாகப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பேரிடருக்குப் பின்னர் ஏற்பட்ட கொள்வனவுத் தேவைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக மீளக் கட்டியெழுப்பவும், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளதை இந்த ஒப்பந்தப் பரிமாற்றம் எடுத்துக்காட்டுகின்றது என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

43 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0