உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்; விவசாயிகள் கவலை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
98 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக வீசி வரும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரினுள் மூழ்கியுள்ளதாகப் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தின் திடீர் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பால் பிடிக்கும் பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட நெற்பயிர்கள் பலத்த காற்றினால் தரைமட்டமாகச் சாய்ந்துள்ளதுடன், தொடர் மழையால் வயல்வெளிகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. இதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, நீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வடிகான் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வயல்களிலிருந்து மழைநீர் வெளியேறுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு, உரம் மற்றும் விதை நெல் செலவுகளுக்கு மத்தியில் கடன் பட்டாவது சிறுபோக/பெரும்போகச் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இந்நிலைமை பெரும் பொருளாதார பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பாதிப்புக்குள்ளான வயல்நிலங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கமநல சேவை அலுவலர்களும் உடனடியாகப் பார்வையிட்டு, பயிர்ச்சேத மதிப்பீடுகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கமும் விவசாயக் காப்பீட்டுச் சபையும் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0