கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் இன்று காலை 9.25.க்கு கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.